சனி, 17 அக்டோபர், 2009

தொலைத்ததை(தொலைந்ததை) தேடும் முயற்சி

சற்றேறக்குறைய ஒரு வருடமாக பதிவுகளைப் படித்து வந்தாலும் பதிவு எழுதுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்து இருக்கிறது. பால்யத்தின் அடையாளங்களை தொலைத்து விட்டபோதே புன்னகையும் தொலைந்து போனது.என்னைப் பற்றிய சுய விவகாரங்களை மட்டும் இந்த முதல் பதிவில் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு வித கூச்சமும் குற்ற உணர்வும் என்னை ஆட்கொள்கின்றன. எனவே அடுத்த பதிவில் எழுதுகிறேன்.